கொவிட் பரவலை கட்டுப்படுத்த தொழுகைகளில் குனூத்துன்னாஸிலாவை ஒதுமாறு அறிவுறுத்தல்

கொவிட் பரவலை கட்டுப்படுத்த தொழுகைகளில்  குனூத்துன்னாஸிலாவை ஒதுமாறு அறிவுறுத்தல்

நாட்டில் வேகமாக பரவும் கொவிட் - 19 கட்டுப்படுத்த ஐவேளை தொழுகைகளில் குனூத்துன்னாஸிலாவை ஒதுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில்  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ் ஷைக் எம். அர்கம் நூராமித் மற்றும் பத்வாக் குழுவின் செயலாளர் அஷ் ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"உலகின் நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலின் மூலம் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக தற்போது எமது நாட்டில் இவ்வைரஸின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களால் வைத்தியசாலைகளில் நிரம்பியிருப்பதாகவும் மரணங்கள் அதிகரித்திருப்பதாகவும் வைத்திய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

அல்லாஹ் அடியார்களுக்கு சோதனைகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்ப வேண்டும் என்பதையே விரும்புகின்றான். இச்சோதனைகள் நீங்குவதற்காக தொழுகை, நோன்பு, சதக்கா, திக்ர், இஸ்திஃபார், துஆ போன்ற நல்லமல்கள் மூலம் அல்லாஹ்வின் பக்கம் நாம் நெருங்க வேண்டும்.

குறிப்பாக துஆ மூலமாக முயல வேண்டும். ஏனெனில் துஆ என்பது ஒரு வணக்கம் என்பதுடன், கஷ்ட நஷ்டங்களை அல்லாஹ்விடம் முறையிட்டு அதற்கான பரிகாரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஓர் ஆயுதமுமாகும்.

அல்லாஹ் அல் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்:

'என்னிடம் பிரார்த்தனை செய்யுங்கள்ளூ நான் உங்களின் பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்கிறேன்.' (சூரா அல்-ஙாபிர் : 60)

'எனது அடியான் என்னை அழைப்பானாயின், நிச்சயமாக நான் அவனுக்கு மிக சமீபத்தில் இருக்கிறேன். அழைப்போரின் அழைப்புக்கு பதில் சொல்பவனாகவும் இருக்கிறேன்.' (சூரா அல் பகரா : 186)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சோதனைகளின் போது பிரார்த்தனைகளின் மூலம் அல்லாஹ்வின் பக்கம் நெருங்குபவர்களாக இருந்தார்கள். குறிப்பாக தொழுகைகளில் குனூத்துன்னாஸிலா (சோதனைகளின் போது ஓதப்படும் குனூத்) ஓதியுள்ளார்கள்.

எனவேதான் பொதுவான சோதனைகளின் போது தொழுகைகளில் குனூத்துன்னாஸிலா ஓதுவது சுன்னத்தாகும் என மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர்.

இதனை அடிப்படையாக வைத்து கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெறவும் அதன் தாக்கம் நீங்கி, நாட்டில் சுபீட்சம் ஏற்படவும், ஐவேளைத் தொழுகைகளில் குனூத்துன்னாஸிலா வை சுருக்கமாகவும் உறுதியான நம்பிக்கையுடனும் ஒரு மாதகாலத்திற்கு மாத்திரம் ஓதிவருமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் வேண்டிக் கொள்கின்றது.

குனூத்துன்னாஸிலா வை ஓதும் போது பின்வரும் துஆக்களை ஓதுமாறு ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.

 
اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ، فإِنَّكَ تَقْضِي وَلا يُقْضَى عَلَيْكَ، وَإِنَّهُ لا يَذِلُّ مَنْ وَالَيْتَ، وَلا يَعِزُّ مَنْ عَادَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ (سنن أبي داود)


اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ (سنن أبي داود)


اللَّهُمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ (صحيح البخاري)


اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ (صحيح مسلم)