பல கோடி ரூபா பணத்தினை ஏப்ப விட்ட பிரிவேல்த் குளோபலின் பணிப்பாளர் இந்தியாவில் கைது

பல கோடி ரூபா பணத்தினை ஏப்ப விட்ட பிரிவேல்த் குளோபலின் பணிப்பாளர் இந்தியாவில் கைது

கிழக்கின் பல நகரங்களில் இயங்கி 200 கோடி ரூபாவை ஏப்பம் விட்ட பிரிவேல்த் குளோபல் நிறுவனத்தின் பணிப்பாளரான சிஹாப் ஷெரீப், இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் பைப்பர் படகில் தமிழகத்தின் வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் நேற்று (06) வெள்ளிக்கிழமை இரவு சென்றிறங்கிய போது கைது செய்யப்பட்டதாக தமிழக காவல்துறை அறிவித்தது.

இவருடன் இவரது மனைவியான பர்சானா மார்க்கார் மற்றும் மகன் ஆகியோரும் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இந்த மூன்று பேரையும் வேதாரண்யம் கடலோர காவல் படையினர் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்ததாக அவர்களிடம் மேற்கொண்ட  முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.