காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு

காரைதீவு பிரதேச சபை  உறுப்பினர் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு

-நூருள் ஹுதா உமர்-

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலின் ஆதரவுடனான சுயேட்சை குழுவின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினரான  ஏ.ஆர்.எம் பஸ்மீர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இன்று (16) வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார்.

மாளிகைக்காட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸின் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார்.

திகாமடுல்ல மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து தேர்தல் கேட்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்காகவும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் வெற்றிக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவதாகவும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் பஸ்மீர் இதன்போது தெரிவித்தார்.

மாளிக்கைக்காடு மேற்கு வட்டாரத்தில் தோடம்பழ சுயேச்சை குழு சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் தோடம்பழ சுயேச்சை குழு நிர்வாக உறுப்பினர்கள் தொடர்ச்சியான புறக்கணிப்பு மற்றும் தோடம்பழ சுயேச்சை குழு உறுப்பினர்கள் அண்மையில் தேசிய காங்கிரஸ் கட்சியில் இணையும் போது கூட தன்னை அழைக்கவில்லை என்பதோடு இன்னும் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் காரணமாகவே நான் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தாக இங்கு பேசும்போது கருத்து தெரிவித்தார்.