நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்த 6 மாத கால வழிகாட்டல்

நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்த 6 மாத கால வழிகாட்டல்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் 'பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாத கால வழிகாட்டipனை'  எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதி அறிவிக்கவுள்ளார்.

இந்நிகழ்வானது இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இடம்பெறுவதுடன் மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படும். நிலவுகின்ற கொவிட்-19 உலகளாவிய நோய்த் தொற்றுச் சூழல் மற்றும் தேவையான சமூக இடைவெளியினைக் கடைப்பிடித்தல் என்பவற்றின் காரணமாக பங்குபற்றுதலானது அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆளுநரினால் மேற்கொள்ளப்படும் இந்த விளக்கவுரையானது இலங்கை மத்திய வங்கியின் யூடியூப் (YouTube) மற்றும் பேஸ்புக் (Facebook) என்பவற்றின் ஊடாக நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளது.