றிசாத் பதியுதீனினை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

றிசாத் பதியுதீனினை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீனினை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு, கோட்டை நீதவான் இன்று (10) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

ஈஸ்டர் தற்கொலை தாக்குதலுடன் தொடர்புபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த 100 நாட்களுக்கு மேலாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னாள் அமைச்சர் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று அவர் கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போதே அவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.