ரஞ்சன் ராமநாயக்க பராளுமன்ற உறுப்புரிமையை இழக்கமாட்டார்: சஜித்

ரஞ்சன் ராமநாயக்க பராளுமன்ற உறுப்புரிமையை இழக்கமாட்டார்: சஜித்

நீதிமன்ற அவமதிப்பைக் காரணமாகக் கொண்டு நான்கு வருட சிறைத் தன்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன்; ராமநாயக்க, தனது பராளுமன்ற உறுப்புரிமையை இழக்க மாட்டார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 89ஆம், 91ஆம் மற்றும் 105ஆவது பிரிகளின் படி, ரஞ்சன் ராமநாயக்க தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்கமாட்டார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தனது முகநூலில் பதிவொன்றினை பதிவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.