ஈதுல் பித்ர் நேரலை நிகழ்ச்சி

ஈதுல் பித்ர் நேரலை நிகழ்ச்சி

கொவிட் - 19 அசாதாரன சூழ்நிலையில், ஈதுல் பித்ர் தொழுகையை சகல முஸ்லிம் ஆண், பெண்களும் தவறாது தொழுவதற்கு வழிகாட்டவும் கூட்டு உணர்வை உண்டாக்கும் முகமாகவும் உலமாக்களால் நடாத்தப்படும் நேரலை நிகழ்ச்சி பெருநாள் தினம் காலை 7.30 முதல் 8.15 வரை இடம்பெறவுள்ளது.

புத்தசாசன மதவிவகார கலாச்சார விவகார அமைச்சின் ஆலோசனைக்கேற்ப, வக்பு சபையின் பணிப்புரையின் கீழ் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இந்த நேரலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.

நிகழ்ச்சி நிரல் :

7.30 - தக்பீர்

7.40 - பெருநாள் தொழுகை

7.50 - பெருநாள் குத்பா

நேரலை : சக்தி TV : காலை  7.30 - 8.15

மறு ஒலிபரப்பு: SLBC முஸ்லிம் சேவை : காலை  8.30 - 9.15

காலை 7.30 மணிக்கு எல்லோரும் தத்தமது வீடுகளிலிருது பெருநாள் தக்பீரில் இணைந்து கொள்வோம். வீட்டில் ஜமாஅத் நடத்தக்கூடியவர் இருந்தால் 7.40 மணிக்கு  ஜமாஅத்தாக தொழவும்.

இல்லாவிடில் தனியாக தொழும் நிய்யத்தோடு தனியாக தொழுது கொள்ளவும். தொழுகையை முடித்து 7.50 மணிக்கு குத்பாவில் இணைந்து கொள்ளவும். 7.30 சக்தி நேரலையை தவறியோர், 8.30 முஸ்லிம் சேவை நிகழ்ச்சியையும் தொடரலாம். இவ்வாறு பெருநாள் தினத்தின் நன்மைகளை அடைந்து கொள்வோம்.