குவைத்தில் வாழும் இலங்கையர்களின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு

குவைத்தில் வாழும் இலங்கையர்களின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு

குவைத்தில் வாழும் இலங்கையர்களின் அமைப்பான செலானீஸ் உதவும் கரங்கள் - குவைத் அமைப்பின் ஏற்பாட்டிலான இரத்தான நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (18) ஜாப்ரியா மத்திய இரத்த வங்கியில் இடம்பெற்றது.

குவைத் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் சுதந்திர தினத்தை முன்னிட்டு குறித்த அமைப்பினால் நான்காவது தடவையாக இந்த இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் குவைத் வாழ் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். இந்த நிகழ்விற்கு விஷேட அதிதியாக குவைதிற்கான இலங்கை தூதுவர் மொஹமட் ஜவ்ஹார் கலந்துகொண்டார்.

இதேவேளை, டாக்டர் நவ்ராஸினால் மும்மொழிகளில் தொகுக்கப்பட்டுள்ள இரத்ததானம் தொடர்பான கையேடொன்றும் இந்த நிகழ்வில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-மொஹமட் பர்ஹான்-