முதலாவது கல்விக் கருத்தரங்கு அங்குரார்ப்பணம்

முதலாவது கல்விக் கருத்தரங்கு அங்குரார்ப்பணம்

இஸ்லாத்தில் சகவாழ்வு, மத நல்லிணக்கம், பொறுப்புணர்வு, மற்றும் நடுநிலைமை பேணல் என்ற அடிப்படைகளை மையமாகக் கொண்ட  முதலாவது கல்விக் கருத்தரங்கின் அங்குரார்ப்பண அமர்வு இன்று (14) புதன்கிழமை விளையாட்டுத் துறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

இந்த அமர்வில் சவூதி அரேபியாவின் கலாசார அமைச்சின் ரியாத் பிரிவிற்கு பொறுப்பாகவுள்ள முஹம்மத் பின் சுலைமான் அல் புரைஹ் சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதி தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் ஹாலீக், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், பேருவளை ஜாமியா கலாபீடத்தின் பீடாதிபதி அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பழீல் உள்ளிட்ட பல உலமாக்கள், அரபுக் கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் பங்கேற்றிருந்தனர்.

சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார, தஃவா மற்றும் வழிகாட்டல் அமைச்சின் அனுசரனையுடன் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தின் மேற்பார்வையில் இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுத் துறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் இன்று இரண்டு அமர்வுகள் இடம்பெற்ற நிலையில், நாளை (15) வியாழக்கிழமை டவர் மண்டபத்தில் மேலும் இரண்டு அமர்வுகள் இடம்பெறவுள்ளது.