மஹிந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை: மில்பர்

மஹிந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை: மில்பர்

முஸ்லிம் தனியார் சட்டம், முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ள தற்போதைய ஆட்சியாளர்கள் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் பெரமுனவின் தலைவரும் பேருவளை நகர சபையின் முன்னாள் தலைவருமான மில்பர் கபூர் தெரிவித்தார்.

தற்போதைய நல்லாட்சியில் ஆட்சியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகளும் பிரச்சினைகளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் ஒருபோதும் எதிர்நோக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் பெரமுனவின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.