சஹ்ரானுடன் தொடர்புகொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

சஹ்ரானுடன் தொடர்புகொண்டிருந்ததாக  குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

பாறுக் ஷிஹான்

சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12  சந்தேக நபர்களை  மீண்டும் எதிர்வரும் 16ஆம்    திகதி வரை  விளக்கமறியலில்  வைக்குமாறு  கல்முனை நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த வழக்கு  இன்று (02)   திங்கட்கிழமை கல்முனை நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் இரு வேறு சந்தர்ப்பங்களில் வீடியோ கன்பிரன்ஸ் ஊடாக விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போது, சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து குறித்த 12 சந்தேக நபர்களையும் மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில்   வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் வைத்து கடந்த வருடம்  மேற்குறித்த  12 சந்தேக நபர்களும் கைதாகி இருந்தமை  குறிப்பிடத்தக்கது.