கல்முனை Beach Parkஇல் உணவகம் நடத்த விலைமனுக் கோரல்

கல்முனை Beach Parkஇல் உணவகம்  நடத்த விலைமனுக் கோரல்

மிக நீண்ட காலமாக எதுவித பயன்பாடுன்றி காணப்பட்ட கல்முனை கடற்கரை பூங்காவினை மக்கள் பாவனைக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்க கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக அரச - தனியார் பங்குடமை திட்டத்தின் கீழ் இந்த பூங்காவில் உணவகமொன்ற திறக்கப்படவுள்ளது. இதற்கான விலைமனுக் கோரல் தொடர்பான அறிவித்தல் கல்முனை மாநகர சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2024.12.31ஆம் திகதி வரையான காலப் பகுதியில்  இந்தப் பூங்காவில் உள்ள கட்டிடத்தில் உணவகம் நடாத்துவதற்கு ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து குத்தகை விலை மனுக்கோரல் கோரப்படுகின்றது.