திருகோணமலை வைத்தியசாலைக்கு People’s Leasing இனால் பீசீஆர் இயந்திரம் அன்பளிப்பு

திருகோணமலை வைத்தியசாலைக்கு People’s Leasing இனால் பீசீஆர் இயந்திரம் அன்பளிப்பு

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு People’s Leasing நிறுவனத்தினால பீசீஆர் இயந்திரமொன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு அலரி மாளிகையில் நேற்று (16) புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர்  ஜகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபபக்ஷ, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை பீசீஆர்  இயந்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு  ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.