13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியா மீண்டும் வலியுறுத்தல்

13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியா மீண்டும் வலியுறுத்தல்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதனூடாக அர்த்தப்புஷ்டியான அதிகாரப் பகிர்வு ஏற்படும் என இந்தியா மீண்டும் இன்று (22) திங்கட்கிழமை வலியுறுத்தியது.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிற்கும் இலங்கைக்கான பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கபிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.

இதன்போது, 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதனூடாக அர்த்தப்புஷ்டியான அதிகாரப் பகிர்வு ஏற்படும் என பிரதி உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தி மீதான இந்தியாவின் நிலைப்பாட்டினை இதன்போது அவர் வலியுறுத்தினார்.