ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் தொடர்பிலேயே அசாத் சாலி கைது: பொலிஸ்

கடந்த 2019ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் தொடர்பிலேயே மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இன்று (16) பி.ப 6.00 மணியளவில் இவர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமையவே இந்த கைது இடம்பெற்றதாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.