றிசாத் பதியுதீனின் விடுதலைக்காக கல்முனையில் துஆ பிராத்தனை

றிசாத் பதியுதீனின் விடுதலைக்காக கல்முனையில் துஆ பிராத்தனை

-நூருள் ஹுதா உமர்-

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் சுகம் பெறுவதற்காகவும், விரைவில் விடுதலை பெற்று வீடு திரும்புவதற்காகவும் துஆ பிரார்த்தனை செய்யும் நிகழ்வு கல்முனை பட்டின ஜும்மா பள்ளிவாசலில் நேற்று (20) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை மாநகரா சபை உறுப்பினர் எம்.எச்.எம். அப்துல் மனாபின் ஏற்பட்டில் அக்கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும்இ முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கே.எம். அப்துல் றஸாக் தலைமையில் இந்த துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது.