தவறை ஏற்றுக்கொண்டால் மன்னிப்பதற்கு தயார்: மெல்கம் ரஞ்சித்

தவறை ஏற்றுக்கொண்டால் மன்னிப்பதற்கு தயார்: மெல்கம் ரஞ்சித்

எம்.வை.எம்.சியாம்

 

உயிர்த்த ஞாயிறு தின பயங்­க­ர­வாத தாக்­கு­தலின் பின்­பு­லத்தில் இருப்­ப­வர்கள் மறைந்து கொள்ள முயற்­சிக்­கி­றார்கள். எவ்­வா­றா­யினும், தவறை ஏற்றுக் கொள்­ளுங்கள், அதனை தாம் மன்­னிப்­ப­தற்கு தயா­ராக இருப்­ப­தாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் தெரி­வித்­துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் போது பாதிக்­கப்­பட்ட 12 குடும்­பங்­க­ளுக்கு கனே­முல்ல, பொல்­லத்த பிர­தே­சத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட புதிய வீட்­டுத்­திட்­டத்தை கைய­ளிக்கும் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இதன்­போது அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

"உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் வெளிப்­ப­டை­யான விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­படும் என்று முன்னாள் ஜனா­தி­பதி எனக்கு தனிப்­பட்ட வகையில் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்கை தமக்கு வந்த மறு­நாளே அவர் என்னை தொலை­பேசி மூலம் அழைத்து அவற்­றை­யெல்லாம் எவ்­வாறு வெளிப்­ப­டை­யாகக் கூற முடியும்? என்று கேட்டார்.

அறிக்­கை­களை சிபா­ரிசு செய்ய வேண்­டி­யது நீங்கள் இல்லை. இதனை பொலி­ஸா­ரிடம், நீதி­மன்­றத்­திடம் ஒப்­ப­டை­யுங்கள் என்று நான் அவ­ரிடம் கூறினேன். அதற்கு அவர் ஒன்றும் கூற­வில்லை.

முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அன்று பாது­காப்­பிற்கு பொறுப்­பாக இருந்­தவர். ஏன் அவ­ரு­டைய பொறுப்­பு­களை மறைப்­ப­தற்கு முயற்­சிக்­கிறார். அதன் பின்­ன­ணியில் அர­சியல் சதி ஒன்று இருப்­ப­தாக பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு அறிக்­கையில் தெளி­வாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

அதே­போன்று உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான ஆணைக்­கு­ழுவின் அறிக்கை மற்றும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­யிலும் இது தொடர்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அவற்றில் பல தெளி­வற்ற விட­யங்கள் இருக்­கின்­றன. ஆனால் அவற்றை வெளிக்­கொ­ணர்­வ­தற்கு எவரும் ஆர்வம் காட்­டு­வ­தில்லை.

சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு கண்­களும் இல்லை, காது­களும் இல்லை, அதனால் அவர்­களால் ஒன்­றையும் செய்­வ­தற்கு முடி­யா­துள்­ளது.

தற்­போது நாட்டில் செவி­டான யானைகள் அதன் கூட்­டத்­துடன் வந்­து­விட்ட­ன. அவர்­க­ளிடம் வீணை வாசிப்­பது பய­னற்­றது. சட்­டத்தை நினைத்­த­படி மாற்றி இதை வைத்து அதனை கை கழுவி விடலாம் என்று நினைக்­கி­றார்கள்.

அவ்­வாறு நினைத்தால் மற்­ற­வர்­க­ளுக்கு ஹீரோ­வாக தோன்­றலாம். ஆனால் ஒன்று நினைவில் இருக்­கட்டும். வேதத்தில் உள்­ளது. நீங்கள் செய்த பாவங்கள் உங்­களை பின் தொடரும் என்­பதை நினைவில் கொள்ள வேண்டும்" என்றார்.

Vidivelli