இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (05) செவ்வாய்க்கிழமை கொழும்பு வரவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்தது.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் அழைப்பினை ஏற்று இலங்கை வரும் அவர், வியாழக்கிழமை வரை கொழும்பில் தங்கியிருக்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.