எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கும் அரச தரப்பு பாராளுமன்ற குழுக் கூட்டத்திற்கு அழைப்பு

எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கும் அரச தரப்பு பாராளுமன்ற குழுக் கூட்டத்திற்கு அழைப்பு

எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் எட்டு பாராளுமன்ற உறுப்பிர் அரச தரப்பு பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசீம், ஹாபீஸ் நசீர் அஹமட்,  எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.தௌபீக், அலி சப்ரி றஹீம், இஷாக் றஹ்மான், எம். அரவிந்தகுமார் மற்றும் டயான கமகே ஆகியோருக்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்த்தன தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதற்கு முன்னதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (04) திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் அரச தரப்பு பாராளுமன்ற குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்;துகொள்வதற்காகவே குறித்த எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.