இராணுவத்தினரின் தியாகம்! இன்று நடைபெற்ற சம்பவம்

இராணுவத்தினரின் தியாகம்! இன்று நடைபெற்ற சம்பவம்

ஏ.எஸ்.எம்.ஜாவித் 

புத்தளம் மாவட்டத்தின் கரம்பை, ஹுசைனியாபுரம் பகுதியில் வசித்த முகமட் ஸாலிஹு சித்தி சுபைரா என்பவர் மாரடைப்பினால் மரணமடைந்து இன்று  (03)  நல்லடக்கம் செய்யப்படவிருந்தது.

இந்த நிலையில் அவரின் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து தற்போது நாடு திரும்பி முல்லைத்தீவு கேப்பாபிலவு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இதனை அறிந்த முல்லைத்தீவு மாவட்ட இராணுவ தளபதியின் விஷேட பாதுகாப்பு வழிகாட்டலுடன் அழைத்து வரப்பட்டு மனைவியின் இறுதி கடமையில் கலந்துசெய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து தொற்றுநீக்கம் செய்து மீண்டும் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். இதற்குரிய அனைத்து ஒழுங்குகளையும் முல்லைத்தீவு இராணுவ பொறுப்பாளர் கிராம அலுவலருடன் கலந்துரையாடி பொதுச் சுகாதார பரிசோதகர்மற்றும் நுரைச்சோலை பொலிஸ் உத்தியோகத்தர்களையும் ஒழுங்குபடுத்தி சிறப்பான முறையில் மேற்கொண்டிருந்தனர்.

இதனை பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் மேற்கொண்டமைக்காக குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.