மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமனம்

மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமனம்

எதிர்வரும்  செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அவர் தனது கடமைகளை, இம்மாதம் 15ஆம் திகதியன்று பொறுப்பேற்கவுள்ளார்.

பிரசித்திபெற்ற பட்டயக் கணக்காளரான அஜித் நிவாட் கப்ரால், இதற்கு முன்னர் அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளதோடு, சுமார் 9 வருடக் காலப்பகுதி வரை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கியின் ஆளுநர் பதவியினை பொறுப்பேற்பதற்காக அவர் தனது தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இன்று இராஜினாமாச் செய்தார்.