தம்மிக்க பாணிக்கு வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரம் ரத்து

தம்மிக்க பாணிக்கு வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரம் ரத்து

கொரேனா வைரஸின் கட்டுப்பத்த முடியும் என விளம்பரப்படுத்தப்பட்ட தம்மிக்க பாணிக்கு வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களம் இன்று (11) புதன்கிழமை அறிவித்தது.

"இந்த பாணிக்கு தற்காலிக அனுமதிப் பத்திரமே வழங்கப்பட்டது. எனினும் மருத்துவ பரிசோதனையில்  குறித்த பாணி சித்தியடையவில்லை. இதனால் வழங்கப்பட்ட தற்காலிக அனுமத்திப் பத்தரம் தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளது" என ஆயுர்வேத ஆணையாளர் தம்மிக்க அபேயகுணவர்த்தன தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்கான ஆயுர்வேத சிகிச்சை முறை தொடர்பாக இன்று (11) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.