கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவருக்கு மீண்டும் தொற்று

கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவருக்கு மீண்டும் தொற்று

கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி வீடு திரும்பி ஜா−எல பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு மீண்டும் அதே வைரஸ் தொற்று உள்ளமைக்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வீடு திரும்பிய இவர் 14 நாட்கள் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் கடந்த 30ஆம் திகதி இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இவரை பரிசோதித்த நிலையிலேயே இவருக்கு கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகியுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த தகவலை ஜாஎல பிரதேசத்தினைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர் அனுர அபேயரத்ன உறுதிப்படுத்தினார்