சமூக ஊடக செயற்பாட்டாளர்களுக்காக அரசாங்கத்தினால் வாராந்த ஊடக மாநாடு ஏற்பாடு

சமூக ஊடக செயற்பாட்டாளர்களுக்காக   அரசாங்கத்தினால் வாராந்த ஊடக மாநாடு ஏற்பாடு

பேஸ்புக், யூடியூப் ஆகிய சமூக ஊடகங்களின் செயற்பாட்டாளர்கள் மற்றும் இணையத்தள ஊடகவியலாளர்கள் ஆகியோருக்காக விசேட ஊடக மாநாடொன்றினை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தினால் இந்த ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் அபிவிருத்தியினை மையமாகக் கொண்ட இந்த ஊடகவியலாளர் மாநாடு ஒவ்வொரு புதன்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சில் இடம்பெறும்

சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வாரத்தின் குறிப்பிட்ட தலைப்பு குறித்த விவாதங்களில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கபற்ற விரும்புபவர்கள்  இங்கு பதிவினை மேற்கொள்ள முடியும்.