150க்கும் மேற்பட்ட ஊழியர்களை நீக்க விகடன் குழுமம் தீர்மானம்

150க்கும் மேற்பட்ட ஊழியர்களை நீக்க விகடன் குழுமம் தீர்மானம்

சுமார் 150க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய விகடன் குழுமம் முடிவு செய்துள்ளது.

இதனை எதிர்த்து போராடுவதற்காக இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது தமிழ் நாடு பெண் ஊடகவியலாளர் சங்கத்தின் இணைப்பாளரான ஜே. ஜெயபதுரி தெரிவித்தார்.

விகடன் அலுவலகம் முன்பாக எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.