மாளிகாவத்தையில் சன நெருக்கடி சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது

மாளிகாவத்தையில் சன நெருக்கடி சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது

மாளிகாவத்தை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை சன நெருக்கடிக்குள்ளாகி மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் தனிநபரொருவர் நிதி விநியோக செயற்பாட்டின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கியே மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 04 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.