இந்திய கடற்படையினரால் இலங்கை மீனவர்கள் தாக்கப்படவில்லை: உயர் ஸ்தானிகராலயம்

இந்திய கடற்படையினரால் இலங்கை மீனவர்கள்  தாக்கப்படவில்லை: உயர் ஸ்தானிகராலயம்

இந்திய கடற்படையினரால் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாக நேற்று (17) வியாழக்கிழமை வெளியான செய்திகளில் எந்தவித உண்மையுமில்லை என கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

"இது தொடர்பில் வெளியாகியான செய்திகள் அனைத்தும் முற்றுமுழுதாக உண்மைக்கு புறம்பானவையாகும். இவ்வாறான எந்த ஒரு சம்பவமும் இடம்பெறவில்லையென நாம் மிகவும் உறுதியாக தெரிவிக்கின்றோம்" என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் இருதரப்பு பொறிமுறைகள் மற்றும் புரிந்துணர்வுகள் ஆகியவற்றின் ஊடாக இலங்கை இந்திய மீனவர்கள் சம்பந்தமான சகலபிரச்சனைகளுக்கும் ஒரு மனிதாபிமான அடிப்படையில் தீர்வினை காண்பதற்கு இந்தியா மிகுந்த உறுதிப்பாட்டுடன் உள்ளது என உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.