தென் இந்தியாவிற்கான இலங்கையின் பிரதி உயர் ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்பு

தென் இந்தியாவிற்கான இலங்கையின் பிரதி உயர் ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்பு

தென் இந்தியாவிற்கான இலங்கையின் பிரதி உயர் ஸ்தானிகராக டி. வென்கடேஸ்வரன் வெளிவிவகார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சிபாரிசுடன் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர், தனது கடமைகளை சென்னை மாநகரிலுள்ள இலங்கை பிரதி உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் நேற்று (12) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் உயர் ஸ்தானிகராலய உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

ரஞ்சனாஸ் ஆடையகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான இவர், கொழும்பு வர்த்தக சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினருமாவார்.