தமிழக முதலமைச்சருடன் தொலைபேசியில் கலந்துரையாடிய செந்தில் தொண்டமான்

தமிழக முதலமைச்சருடன் தொலைபேசியில் கலந்துரையாடிய செந்தில் தொண்டமான்

தமிழக முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலினுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடலொன்று நேற்று (29) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கான உதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டமைக்கு, பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான்இ தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலினுக்கு தனது நன்றிகளை இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன்இ மலையக மக்கள் தொடர்பிலும் இந்த கலந்துரையாடலின் போது விசேட கவனம் செலுத்தி கலந்துரையாடப்பட்டதாக செந்தில் தொண்டமான் கூறினார்.

இந்த விடயங்கள் தொடர்பில் நேரில் சந்தித்து கலந்துரையாடுவோம் என தமிழக முதலமைச்சர், பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானுக்கு உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.