கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு  மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு

எம்.என்.எம்.அப்ராஸ்

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த  வைத்தியசாலைக்கு சுமார் 25 லட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் கடல் கடந்து வாழ் கல்முனை உறவுகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

நாட்டில் தற்போது கொரோனா தொற்று  அதிகரித்து வரும் நிலையில் பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த  வைத்தியசாலையில் அமையப்பெற்றுள்ள கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கு சில மருத்துவ உபகரணங்களின் அவசியத் தேவை கருதி  வைத்தியசாலையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, "எமது உறவுகளை பாதுகாக்க நாமும் பங்காளராவோம்" எனும் தொனி்பொருளில் கல்முனைக்கான வளைகுடா அமையத்தினால் (1,254,000 ரூபா) பெறுமதியான Non-Intensive Ventilator (CPAP & BiPAP) - 01, Pulse oximeter - rossmax - 06 மற்றும் கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த ஜப்பான் நாட்டில் வசிப்போரின் நிதி பங்களிப்புடன் (1,200,000 ரூபா) பெறுமதியான Non-Intensive Ventilator (CPAP & BiPAP) - 01  அன்பளிப்பு செய்யப்பட்டன.

குறித்த மருத்துவ உபரணங்கள் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம். றகுமானிடம் குறித்த அமைப்பின் உறுப்பினர்களால் (09) இன்று உத்தியோக பூர்வமாக அன்பளிப்பு செய்யப்பட்டது.

இதன்போது வைத்தியர்களான எம். எம்.ஹபிலுல் இலாஹி, ஏ. ஆர். எம். ஹாரிஸ், ஏ.எல். பாறுக், என்.சுகைப் ஆகியோர் இணைந்து கொண்டனர்.

கொரோனா இடர் காலத்தில் இவ்வாறான வைத்தியசாலைக்கு  மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவிய மேற்குறித்த அமைப்பினருக்கு வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம். றகுமான் தனது நன்றியினை தெரிவித்தார்.