வேட்புமனு பத்திரத்தில் கைச்சாத்திட்டார் ஜீவன் தொண்டமான்

வேட்புமனு பத்திரத்தில் கைச்சாத்திட்டார் ஜீவன் தொண்டமான்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்புமனு பத்திரத்தில் ஜீவன் தொண்டமான் இன்;று (04) வியாழக்கிழமை கையெழுத்திட்டார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினை அடுத்து வெற்றிடமான  இடத்திற்கான அவரது புதல்வாரன ஜீவன் தொண்டமான் கையெழுத்திட்டுள்ளார்.

குறித்த வெற்றிடத்திற்கு ஜீவன் தொண்டமானை நியமிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அனுமதி வழங்கிய நிலையிலேயே இன்று அவர் வேட்புமனு பத்திரத்தில் கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.