'தேரர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்'

'தேரர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்'

எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற தேரர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை மிகிந்தல ரஜமகா விகாரையின் விகாராதிபதி வண. கலாநிதி வலஹஹெங்குனவாவே தம்மரத்ன தேரரினால் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தேரர்கள் யாரும் புத்தசாசனத்தினை முன்னேற்றுவதற்கான எந்த சட்ட மூலத்தினையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.

தனிப்பட்ட நலன்களுக்காகவும், சொகுசு வாழ்க்கைக்காகவும் பாராளுமன்ற வரப்பிரசாதங்களை குறித்த தேரர்கள் பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வண. அத்துரலிய ரத்ன தேரர் உள்ளிட்ட பல தேரர்கள் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் கட்சி சார்பில் இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த செய்தியின் முழுமை: