இதுவரை 16 கொவிட் ஜனாஸாக்கள் நல்லடக்கம்

இதுவரை 16 கொவிட் ஜனாஸாக்கள் நல்லடக்கம்

ஓட்டமாவடி, மஜ்மா கிராமத்தில் இதுவரை 16 கொவிட் - 19 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலான 'விடியல்' இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

கொவிட் - 19 நோய் காரணமாக உயிரிழப்பவர்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதி சுகாதார அமைச்சினால் நேற்று (05) வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. இதனையடுத்து நேற்று ஒன்பது ஜனாஸாக்களும், இன்று (06) சனிக்கிழமை ஏழு ஜனாஸாக்களும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஜனாஸா நல்லடக்கத்திற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் இராணுவத்தினரும், சுகாதார துறையினரும் வழங்கி வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.