தௌபீக் எம்.பி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை

தௌபீக் எம்.பி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்இ பாராளுமன்றத்தில் இன்று (22) திங்கட்கிழமை நடைபெற்ற வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வந்த நிலையிலேயே, இவர் இன்றைய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமை முக்கிய விடயமாகும். கட்சியின் தீர்மானத்தினை மதித்தே அவர் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வரவு - செலவுத் திட்டத்தினை எதிர்ப்பது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் தீர்மானித்த நிலையில் அக்கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இதேவேளை, அக்கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம் மாத்திரம் வரவு-செலவுத் திட்டத்தினை எதிர்த்து வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.