manthri.lk இன் தரப்படுத்தலில் முஷாரப் எம்.பி அம்பாறை மாவட்டத்தில் முதலிடம்

manthri.lk இன் தரப்படுத்தலில் முஷாரப் எம்.பி அம்பாறை மாவட்டத்தில் முதலிடம்

manthri.lk இன் தரப்படுத்தலின் அகில இலங்கை மக்கள் காங்கரஸின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.எம். முஷாரப்,  அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தினை பெற்றுள்ளார்.

பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை அடிப்படையாக வைத்தே இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்படுகின்றது.

மொத்த தரவரிசையில் 65ஆவது இடத்தில்  பாராளுமன்ற உறுப்பினரான எம்.எம். முஷாரப் காணப்பட்டாலும், அம்பாறை மாவட்டத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அவர் முன்னிலை வகிக்கின்றார்.

கடந்த 20 வருடங்களாக இந்த மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்படுகின்றவர்களை விட எம்.எம். முஷாரப் முன்னிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான டீ. வீரசிங்க – மொத்த தரவரிசையில் 132ஆவது இடத்திலும், ஏ.எல்.எம்.அதாஉல்லா - மொத்த தரவரிசையில் 144ஆவது இடத்திலும், விமலவீர திசாநாயக்க - மொத்த தரவரிசையில் 165ஆவது இடத்திலும்,  டாக்டர் திலக் ராஜபக்ஷ - மொத்த தரவரிசையில் 202ஆவது இடத்திலும் , எச்.எம்.எம்.ஹரீஸ் - மொத்த தரவரிசையில் 204ஆவது இடத்திலும், பைசால் காசீம் - மொத்த தரவரிசையில் 212ஆவது இடத்திலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

manthri.lk எனப்படுவது பாராளுமன்றத்தில் இருக்கும் 225 உறுப்பினர்களின் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை மூன்று மொழிகளில் வழங்கவுள்ளதொரு முன்னோடி இணையத்தளமாகும்.

இது போன்றதொரு முன்னெடுப்பு இலங்கையில் மேற்கொள்ளப்படும் முதல் தடவை இதுவாவதோடு பாராளுமன்றத்திற்கு செல்லும் வாய்ப்புப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள் அவர்களுக்கு வாக்களித்த பொது மக்கள் மீதுள்ள அவர்களது கடமையை எந்தளவு சிறப்பாக நிறைவேற்றுகின்றார்கள் என்பதை அவதானித்து அவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கும் ஒரு பொறிமுறையாக செயற்படும். வெளிப்படைத் தன்மை, நல்லாட்சி போன்ற அம்சங்களை ஊக்குவித்து நம் நாட்டின் ஜனநாயக செயற்பாடுகள் உயர்ந்ததொரு தளத்ததை அடைய பங்களிப்பு செய்வது manthri.lk முன்னெடுப்பின் ஒரு முக்கிய குறிக்கோளாகும்.