பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமுமில்லை: ஜீ.எல்

பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமுமில்லை: ஜீ.எல்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் கல்வி அமைச்சினால் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படாமையினால் பாடசாலைகளை மீளத் திறக்கும் திகதி தொடர்பில் எதுவும் கூற முடியாதுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் மிக விரைவில் பாடசாலைகளை திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையினால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் தொற்றுக்கு மத்தியில் பாடசாலைகளை திறந்து மாணவர்களை பாதிப்புக்குள்ளாக்க அரசாங்கம் தயாரில்லை என அமைச்சர் மேலும் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (07) திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.