முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 16 பேர் விடுதலை

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 16 பேர் விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் இன்று (24) வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பொசன் தினத்தை முன்னிட்டு  ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  

இதற்கமைய, அனுராதபுரம் சிறையிலிருந்து 15 பேரும், யாழ்ப்பாணம் சிறையிலிருந்து ஒருவருமாக 16 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக, சிறு குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற 77 கைதிகளும் இவ்வாறு ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.