துமிந்த சில்வா விடுதலை

துமிந்த சில்வா விடுதலை

கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.

ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் கீழே இவர் விடுதலை செய்யப்பட்டார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்ம பிரோமசந்திரவின் கொலை வழக்கில் மரண தண்டனை அனுபவித்து வந்த நிலையிலேயே இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.