ஜுலை 21ஆம் திகதி ஹஜ் பெருநாள்

ஜுலை 21ஆம் திகதி ஹஜ் பெருநாள்

புனித துல்ஹஜ் மாத தலைப்பிறை இன்று (10) சனிக்கிழமை மாலை நாட்டின் எந்தப் பிரதேசத்திலும் தென்படாமையினால் எதிர்வரும் 21ஆம் திகதி புதன்கிழமை ஹஜ் பெருநாளை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற தலைப் பிறை தீர்மானிக்கும் மாநாட்டிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புனித துல்ஹஜ் மாத தலைப்பிறை தென்படாமையினால் புனித துல்ஹஃதா மாதத்தினை 30 நாட்களாக பூர்த்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.