திருமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு COVID-19 பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்

திருமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு COVID-19 பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்

எப்.முபாரக்

கொவிட் 19 தொற்றிலிருந்து ஊடகவியலாளர்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான முகக்கவசம், கிருமி தொற்று நீக்கி மற்றும் மேலங்கி போன்ற COVID-19 பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருகோணமலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (01) நடைபெற்ற நிகழ்வில் அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் இந்த உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரளாவின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தில் செயற்படும் 35  ஊடகவியலாளர்களுக்கு கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.