'பின்தங்கிய பிரதேசங்களின் சுகாதார அபிவிருத்திக்கு WHO கைகொடுக்க வேண்டும்'

'பின்தங்கிய பிரதேசங்களின் சுகாதார அபிவிருத்திக்கு WHO கைகொடுக்க வேண்டும்'

பின்தங்கிய பிரதேசங்களின் சுகாதார அபிவிருத்திக்கு உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) கைகொடுக்க வேண்டும் என கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின  வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை  மேம்பாட்டு   இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் அலுவலகத்தில் அதன் இலங்கைக்கான பொறுப்பாளர் வைத்தியர் அலங்கா சிங்குடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

இந்த சந்திப்பில் உலக சுகாதார ஸ்தாபன இலங்கை அலுவலகத்தில் பணியாற்றும் வைத்தியர் ஒலிவியா கோராசன் நிவேராஸ், பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை  மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாண மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சுகாதார பிரச்சனைகள் மற்றும் சுகாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் தற்போது நாட்டில் நிலவுகின்ற கொவிட்-19 தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து  உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் நாட்டில் கொவிட் -19 தொற்றை முற்றாக கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் பூரண உதவி பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

தடுப்பூசி வேலைத்திட்டத்தில் கிழக்கு மாகாண மக்கள், பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு முன்னுரிமையளித்து விசேட திட்டமொன்றை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை ஒன்றை இதன்போது இராஜாங்க அமைச்சரினால்   முன்வைக்கப்பட்டது

மேற்கூறிய அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு தடுப்பூசி திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு திட்டத்தில் WHO அதன் ஆதரவை அனைத்து பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு சாதகமான முடிவை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.