60 ரூபாவிற்காக புத்தர் சிலையின் கண்ணாடி உடைப்பு: சந்தேகநபர் கைது

60 ரூபாவிற்காக புத்தர் சிலையின்  கண்ணாடி உடைப்பு: சந்தேகநபர் கைது

மாவனெல்ல, ஹிங்குல்ல பிரதேசத்திலுள்ள புத்தர் சிலையொன்றின் கண்ணாடியினை உடைத்து சேதப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

30 வயதான கேகாலை கெட்டிமுல்ல பிரதேசத்தினைச் சேர்ந்த பிரியந்த சம்பத் குமார என்பவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த புத்த சிலை கண்ணாடிக்குள் காணப்பட்ட 60 ரூபா பணத்தினை திருடுவதற்காகவே கண்ணாடியினை உடைத்ததாக குறித்த சந்தேகநபர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

போதைக்கு அடிமையான இவர், முன்னர் சமயத் தளங்களில் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்துடன் பயங்கரவாதற்கோ அல்லது அடிப்படைவாதத்திற்கோ எந்த தொடர்புமில்லை என அவர் தெரிவித்தார்.