இந்திய – இலங்கை பொலிஸ் பிரதானிகள் மாநாடு

இந்திய – இலங்கை பொலிஸ் பிரதானிகள் மாநாடு

இந்திய - இலங்கை பொலிஸ் தலைமையதிகாரிகள் கலந்துகொண்ட பேராளர்கள் மட்டத்திலான முதலாவது மெய்நிகர் பொலிஸ் பிரதானிகள் மாநாடு நேற்று (08 ஏப்ரல்) நடைபெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவை குறிக்கும் வகையில் இப்பேச்சுக்கள் சுமூகமாகவும் வினைத்திறன் மிக்கவகையிலும் இடம்பெற்றன. புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் இந்திய தரப்பினருக்கு தலைமை தாங்கிய அதேவேளை இலங்கை பொலிஸ் மா அதிபர் தனது நாட்டின் பேராளர்களுக்கு தலைமை தாங்கியிருந்தார்.

இரு நாடுகளுக்கிடையேயான மிகக்குறுகிய கடல் பாதையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுவோர் மற்றும் ஏனைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக இரு தரப்பினராலும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பாராட்டிய அதேவேளை, உளவுத்துறை சார்ந்த மற்றும் ஏனைய பின்னூட்ட கருத்துக்களை நிகழ்நேரத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை இங்கு வலியுறுத்தியிருந்தனர்.

உலகளாவிய பயங்கரவாத குழுக்கள் மற்றும் ஒழிந்திருக்கும் குற்றவாளிகள் போன்றோர் எங்கிருந்தாலும் அவர்களுக்கு எதிராக கூட்டாக செயல்பட இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர்.

மேலெழும் சவால்கள் மற்றும் தற்போதுள்ள பாதுகாப்பு சவால்களை வினைத்திறன் மிக்க வகையில் உரிய நேரத்தில் கையாள்வதற்காக “நோடல் புள்ளிகளை” (Nodal Points) ஸ்தாபிப்பதற்கும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒத்துழைப்பு பொறிமுறைகளை வலுவாக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் பிரதானிகள் மாநாட்டு கட்டமைப்பானது இரு தரப்பினையும் சேர்ந்த பாதுகாப்பு அமைப்புக்களால் ஆதரவளிக்கப்படுவதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பொலிஸ் படைகளின் ஒத்துழைப்பினை மேலும் வலுவாக்கும் அதேவேளை இரு நாட்டு மக்களினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு உறுதுணையாக அமையும்.