கொரோனா சடலங்களை கிண்ணியாவில் அடக்க அனுமதி

கொரோனா சடலங்களை கிண்ணியாவில் அடக்க அனுமதி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை கிண்ணியா, மாகமாறு பிரதேசத்தில் அடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்தார்.

இதற்கான அனுமதியினை சுகாதார அமைச்சு இன்று (25) செவ்வாய்க்கிழமை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.