பிரதமர் - புதிய கடற்படை தளபதி சந்திப்பு

பிரதமர் - புதிய கடற்படை தளபதி சந்திப்பு

இலங்கை கடற்படையின் 24ஆவது கடற்படை தளபதியாக புதிதாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.

தனது கடமையை பொறுப்பேற்றதன் பின்னர் கடற்படை தளபதி உத்தியோகப்பூர்வமாக இன்று (17) முற்பகல் அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான நிஷாந்த உலுகேதென்ன, புதிய பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் கடற்படையின் தலைமை பணியாளராக பணியாற்றி வந்தார்.

ரனஷுர, சிறந்த சேவை, விபூஷன சிறந்த சேவை ஆகிய பதக்கங்களை சொந்தமாக்கிக் கொண்ட அவர் 1985 ஜனவரி மாதம் 7ஆம் திகதி கடற்படையில் இணைந்துக் கொண்டுள்ளார்.