ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிப்பு

ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிப்பு

மறு அறிவித்தல் வரை ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் பாரிய ஒன்றுகூடல்கள் ஆகியவற்றினை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்தது.

நாட்டின் தற்போதைய கொவிட் - 19 நிலைமையினைக் கருதியே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட அறிவித்தலொன்று பொலிஸ் திணைக்களத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் திணைக்களம் அறிவித்தது.