போலிப் புகைப்படத்தினை பேஸ்புக்கில் பகிர்ந்தவர் கைது

போலிப் புகைப்படத்தினை பேஸ்புக்கில் பகிர்ந்தவர் கைது

போலியான புகைப்படமொன்றை பேஸ்புக்கில் பகிர்ந்த நபரொருவர் இன்று (23) திங்கட்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொவிட் - 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் களுபோவில போதனா வைத்தியசாலையில் குவிந்து காணப்படுவது போன்ற போலிப் புகைப்படமொன்றினை பேஸ்புக்கில் பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொட பிரதேசத்தினை சேர்ந்த 36 வயதானா நபரே கைது செய்யப்பட்டவராவார்.

தனிமைப்படுத்தல் மற்றும் கணணி குற்றங்கள் ஆகிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (விடியல்)