தனது சகோதரரின் கைது ஒரு அரசியல் பழிவாங்கல்: முன்னாள் அமைச்சர் றிசாத்

"நானோ, எனது குடும்பத்தினரோ எந்தவித பயங்கரவாத நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்டவர்களில்லை" என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் தெரிவித்தார்.

தனது சகோதர் ரியாஜ் பதியுதீனின் கைது ஒரு அரசியல் பழிவாங்கல் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கைதிக்கு எதிராக நாம் நீதிமன்றை நாடவுள்ளோம் என முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் கூறினார்.

தனது சகோதர் ரியாஜ் பதியுதீனின் கைது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் வெளியிட்ட விஷேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.