உலக முஸ்லிம் லீக்கின் செயலாளரினால் அரபா பேருரை நிகழ்த்தப்படவுள்ளது

உலக முஸ்லிம் லீக்கின் செயலாளரினால்  அரபா பேருரை நிகழ்த்தப்படவுள்ளது

உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் நாயகம் கலாநிதி அஷ்ஷெய்க் முஹம்மத் பின் அப்துல் அல் ஈஸாவினால் இந்த வருடத்திற்கான அரபா பேருரை நிகழ்த்தப்படவுள்ளது.

இதற்கான அனுமதியினை சவூதி அரேபிய மன்னர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியாவில் அரபா தினத்தனமான எதிர்வரும் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மஸ்ஜிதுன் நமிராவினால் இருந்து உலக மக்களுக்கான இந்த பேருரை நிகழத்தப்படவுள்ளது.

பல மொழிகளுக்கு நேரடியாக மொழி மாற்றம் செய்யப்படும் இந்த பேருரை, முதற் தடவையாக இந்த வருடம் தமிழ் மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்யப்படவுள்ளது.

இனங்களுக்கு மத்தியில் நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சகவாழ்வு ஆகியவற்றினை ஏற்படுத்துவதற்காக உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் நாயகம் கலாநிதி அஷ்ஷெய்க் முஹம்மத் பின் அப்துல் அல் ஈஸா சர்வதேச ரீதியில் செயற்பட்டு வருவதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உப செயலாளர் மௌலவி எம்.எஸ்.எம். தாசீம் தெரிவித்தார்.