இலங்கையில் நிர்கதியாகியிருந்த பாகிஸ்தானியர்கள் திருப்பி அனுப்பல்

இலங்கையில் நிர்கதியாகியிருந்த பாகிஸ்தானியர்கள் திருப்பி அனுப்பல்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாகிஸ்தான் செல்ல முடியாது இலங்கையில் நிர்கதியாகி காணப்பட்ட 50 பாகிஸ்தானியர்களை வெற்றிகரமாக இன்று (28) செவ்வாய்க்கிழமை நாடு திரும்பினர்.

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் பாகிஸ்தான் அரசு ஆகியன இலங்கை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தது. இந்த பாகிஸ்தானியர்களை வழியனுப்புவதற்காக இலங்கைக்கான பாகிஸ்தான் பிரதி உயர் ஸ்தானிகர் தன்வீர் அகமது கலந்துகொண்டார்.